Tuesday 7th of May 2024 06:46:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையுடனான ரி - 20 போட்டி; தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இலங்கையுடனான ரி - 20 போட்டி; தொடரைக் கைப்பற்றியது இந்தியா!


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 38 ஓட்டங்களையும், தசுன் சானக்க 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

184 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 74 ஓட்டங்களையும், சஞ்சு செம்சன் 39 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமார 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, இந்திய அணி 2 - 0 என்ற அடிப்படையில் இருபதுக்கு20 தொடரை கைப்பற்றியுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE